top of page

2 views0 comments

கனடாவில் குடியேறும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கினற்ன. நாட்டிற்குள் குடிபெயர்பவர்கள் சில ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடியேறுபவர்களில் 15 வீதமானவர்கள் தாயகம் அல்லது வேறும் மூன்றாம் நாடொன்றிற்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டுக்குள் குடிப்பெயர்ந்து 20 ஆண்டு காலப் பகுதிக்குள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக புள்ளி விபரவியல் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1982ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் கனடாவிற்குள் குடியேறியவர்கள் பற்றிய தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் குடியேறி 3 முதல் 7 ஆண்டு காலப் பகுதிக்குள் வேறும் நாடுகளில் குடியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது. வீடமைப்பு பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் குடியேறிகள் கனடாவை விட்டு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். 

0 views0 comments



கனடாவில் பணியிடங்களில் ஆண்கள் துன்புறுத்தப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பணியிடங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 30 வீதமான ஆண் பணியாளர்கள் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். தொழில்களில் ஈடுபட்டு வரும் 50 வீதமான பெண்கள் பாலியல் அல்லது வேறும் வகையில் துன்புறுத்தல்களை அனுபவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

25 முதல் 34 வயது வரையிலான பணியாளர்களே அதிகளவில் இவ்வாறு துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடங்களில் ஒடுக்குமுறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நுகர்வோரினால் பெண் பணியாளர்கள் துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

0 views0 comments
bottom of page